என்னவளுக்கு ஓர் கடிதம்…
சாபம் தராத தேவதைக்கானவை
அம்மா பரந்தேவதையே எங்கம்மா இருக்க நீ….?
என்னதான் உன் Master Plan ..?
இந்த Valentine Day வையும் என்ன தனியாவே கொண்டாட வெச்சிட்டு அப்படி என்ன தான் பண்ணிட்டு இருக்க..?
கிட்டத்தட்ட 27 வருஷம் ஓடி போச்சு என் ஜனனம் தொடங்கி…
இந்த கண்ணாமூச்சி விளையாட்டு போதும்ன்னு தோணுது…
“உனக்கானவள் எங்கோ பிறந்திருக்கிறாள்”ன்னு என்ன சுத்தி இருக்கற எல்லாரும் சொன்னாலும் இந்த பாழப்போன மனசு கேட்கமாட்டிங்குது….எங்கோ பிறந்திருக்கிறாள்ன்னு சொன்னவங்களுக்கு எங்க பிறந்திருக்கிறாள்ன்னு சொல்ல தெரியல…
ஜோசியர் கூட இந்த கட்டம் எல்லாம் கட்டி என்னென்னமோ எனக்கு சாதகமாத்தான் சொல்றார்..
எல்லாருக்கும் ஜான் ஏறினா முழம் சறுக்கும் but நமக்கு தான் கிலோமீட்டர் கணக்குல சறுக்குதே…அதனால இந்த ஜோசியம் ஜாதகத்துல சுத்தமா நம்பிக்கை இல்லாம போச்சு…
நம்ம தலைவர் சொன்ன மாதிரி “உன் வாழ்கை உன் கையில்” கூட பொய்யோன்னு யோசிக்க தோணுது….காரணம் உன் வாழ்கை மட்டுமில்ல என் வாழ்கை கூட உன் கையில் இருப்பாதாகதான் எனக்குள்ள ஒரு பட்சி சொல்லுது…
ஒரு தொலைதூர பயணமும்
ஜன்னலோர இருக்கையும்
கைகளில் பிடித்த எழுத்தாளனின் புத்தகமும்
வாழ்கையை முழுமையாக்க போதும்ன்னு நெனச்சிட்டேன்...
ஆனா “கொன்றாலும் கொண்டாலும் என் சொந்தம் நீ தானே” என்கிற வரிகள் என்னை தினம் தினம் எழுப்பி விடும் போது வாழ்க்கைய நான் இன்னும் முழுசா வாழ்ந்து முடிக்கலங்கற குற்ற உணர்வு என்னை கொஞ்சம் கொஞ்சமா தின்னுட்டு இருக்கு…
எந்த ஒரு ஜீவராசியும் களவு கொல்லாம கூட இருந்திட முடியும் ஆனா காதல் கொல்(ள்)லா(ளா)ம இருக்கவே முடியாது… ஆகையால் இந்த காதல் என்னை கொன்றுவிடுமுன் வந்து என்னை
பல நூறுமுறை பிறக்கச்செய்…
எனக்கான நிகழ்வுகளை நிகழச்செய்…
கருவறை முதல்
கல்லறை வரை
காதலும்
காதல் சார்ந்த நிகழ்வுகளும்
நிகழ்ந்து கொண்டேதான் இருக்கின்றன
யாவருக்கும்…
எப்பொழுதும்…
எந்நிலையிலும்…
காலச்சக்கரம் clockwiseல சுழண்டாலும் anti-clockwiseல சுழண்டாலும் நமக்கான பேரன் பேத்திகளிடம் கதைகள் சொல்வதற்கு நம்மிடையே ஒரு காதல் நிகழ்ந்தேற வேண்டும் என்பது என் எண்ணம்…அதற்காகவேனும் இந்த கடிதம் கண்டவுடன் உடனே வந்து சேரவும்….