Tuesday, June 29, 2010

காதல்-கல்யாணம்

காதல்-கல்யாணம்
முன்னுக்கு
பின்
முரணானது!
பின்னர்
இனிக்கத்தான்
செய்கிறது
முன்னரில்
பெற்ற
வெற்றி!
பின்னர்
வலிக்கவும்
செய்கிறது
முன்னரில்
பெறும்
தோல்வி!

என்னுள்ளே என்னுள்ளே!

இருப்பினும்
சந்தோஷமாய்
இருப்பதாய்
காட்டிக்கொள்(ல்)கிறேன்!

தாகம்!


உனக்கான என்
பிரார்த்தனை தட்டில்
பூக்களை அதிகமாக
வைத்து விட்டமையால்
எனது கோரிக்கைகளை
வைப்பதற்கு இடமின்றி
தவிக்கிறேன்

Tuesday, June 22, 2010

தனிமை!


தனிமையில்
நான்;
துணையாய்
தனிமை!

என்னுலகம்!



விவரிக்க
வார்த்தைகள்
வேண்டுமா என்ன..?!

மறப்பதும் மன்னிப்பதும்!

அதனால் இந்த நொடி
வாழ்வில் இனிக்குதடி!
-இசை
அவளின்நினைவுகள்!!
அவளின் கனவுகள்!!
அவளுக்கான கேள்விகள்!!
என என் உலகை அவள் முழுமையாக ஆக்கிரமிக்க...
-புத்தகம்!
இசையும்
புத்தகமும்
இருந்தென்ன பயன்
உன்னையே நினைவுபடுத்தும்போது.?

Thursday, June 17, 2010

கல்நெஞ்சக்காரி!


கரைப்பார்
கரைத்தால்
கல்லும் கரையும்
ஏனோ உன் மனம்
மட்டும் கரையாமல்
இன்னும் கல்லாய்!

யாரிவள்?!


உடலுக்கு தானடி
காற்று சுவாசம்…
மனதிற்கு சுவாசம்
பிடித்தவளின் நினைவு..!
ஏனோ தெரியவில்லை
சமீப காலமாய்
எனக்கு
மூச்சு திணறுகிறது!

என் பதில்களுக்கான கேள்வி!

விடை
கொடுத்து
விட்டாள்...
கேள்வியை
தேடி அலைந்து
கொண்டிருக்கிறேன்
நான்!

என்னவள்!


வரங்களை
எல்லாம்
தான் பெற்றுக் கொண்டு
வலிகளை
மட்டும் எனக்கு
தந்தவள்!